Sunday, July 17, 2011

நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் ஆபிஸ் 365 அறிமுகம்


ஆபீஸ் தொகுப்புகளைப் பொறுத்தவரை மைக்ரோசாப்ட் எம்.எஸ். ஆபீஸ் மூலம் தன் உறுதியான இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.
இணையத்தில் கூகுள் தன் சாதனங்களை அளித்து இணையப் பயனாளர்களில் பெரும் மக்கள்தொகையைத் தன் பக்கத்தில் வைத்துள்ளது.
இதனைப் பயன்படுத்தி கூகுள் டாக்ஸ்(Google Docs) என்ற வசதியை இணையத்தில் தந்து ஆபீஸ் தொகுப்பு பயன்பாட்டில் புதிய திசையையும் பயன்பாட்டு வழியையும் கூகுள் வழங்கி வருகிறது.
மைக்ரோசாப்ட் பதிலுக்கு இணையம் இணைந்த ஆபீஸ் மற்றும் பிற வசதிகளை அளிக்கும் வகையில் ஆபீஸ் 365 என்ற ஒரு இயக்கத்தினை அண்மையில் அறிமுகப்படுத்தியது.
கிளவுட் கம்ப்யூட்டிங் இயக்க முறையில் ஆபீஸ் 365, டெஸ்க்டொப் கம்ப்யூட்டிங் வசதிகளை மக்களுக்குக் கொண்டு வந்துள்ளது.
சிறிய தொழில் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களின் தகவல் தொழில்நுட்பத்திற்கான செலவினங்களை 50% அளவில் குறைக்கும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த ஆபீஸ் 365 என்ற புதிய வசதியைத் தந்துள்ளது.
இதன் மூலம் இணையம் வழியாக மைக்ரோசாப்ட் வழங்கும் நிறுவனத்திற்கு மட்டுமேயான தனி மின்னஞ்சல் எக்சேஞ்ச் தொடர்பு வசதி, சர்வர் பயன்பாடு ஆகியவை கிடைக்கின்றன. கோப்புக்கள், அழைப்புகள், கூடி விவாதம் செய்வது போன்ற நிர்வாக நடவடிக்கைகளை இதில் மேற்கொள்ளலாம்.
நிறுவனம் ஒன்றின் வேலையை அதில் பணியாற்றுபவர் உலகின் எந்த மூலையிலிருந்தும் செயல்படுத்தலாம். இதனால் இவற்றை நிறுவ ஒரு நிறுவனம் செலவழிக்கும் மூலதனச் செலவு குறைகிறது. ஒரு பயனாளர் மாதம் ஒன்றுக்கு இரண்டு டொலர் கட்டணம் செலுத்தி இந்த வசதியைப் பெறலாம். கூடுதல் வசதிகளுக்கேற்ப கட்டணம் அதிகரிக்கும்.
ஏற்கனவே சோதனை அடிப்படையில் 12,000 நிறுவனங்கள் இதனைக் கடந்த 45 நாட்களாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். உலக அளவில் இரண்டு லட்சம் பேர் பதிந்து பயன்படுத்துகின்றனர். இந்த வசதி 40 நாடுகளில் 20 மொழிகளில் ஏற்கனவே கிடைக்கிறது.
ஆபீஸ் 365 மற்றும் கூகுள் டாக்ஸ் இரண்டுமே இணையத்தில் மட்டுமே கிடைக்கும் கம்ப்யூட்டிங் சாதனங்களாகும். கூகுள் டாக்ஸ் இணையத்திலேயே முழுக்க இயங்குகிறது. ஆபீஸ் 365 இயக்க உங்கள் கணணியில் எம்.எஸ். ஆபீஸ்(ஆபீஸ் 2010 உகந்தது) இருந்தால் நல்லது. இல்லாமலும் இயக்கலாம்.
இணைய வழி தயாரித்த கோப்புக்களை கணணியில் ஓப்லைனில் இயக்கிப் பார்க்க எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பு கணணியில் இருப்பது அவசியம். ஆபீஸ் 365ல் இணைபவர்கள் நிச்சயம் இதனை உணர்ந்து ஆபீஸ் தொகுப்பு ஒன்றைத் தங்கள் கணணியில் வைத்துக் கொள்வார்கள். ஆபீஸ் 365 உரிமக் கட்டணத்திலேயே எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பினையும் இயக்கலாம்.
நிறுவனங்களுக்காக மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் மற்றும் ஷேர் பாய்ண்ட் ஆகியவற்றை இயக்கி அதனை நிர்வகிப்பதில் சிக்கல்களை எதிர் கொண்டு வருபவர்கள் கவலையை விடுத்து ஆபீஸ் 365 இயக்கத்தில் இணையலாம். எந்தக் கவலையும் இன்றி எக்சேஞ்ச், ஷேர் பாய்ண்ட் மற்றும் ஓர் அலுவலகத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும்.
எந்த இணைய பிரவுசரிலும் இந்த இரண்டும் செயல்படும். இருப்பினும் ஆபீஸ் 365 இன்டர்நெட் எக்ஸ்புளோர ரிலும், கூகுள் டாக்ஸ் குரோம் பிரவுசரிலும் முழுமையான விளைவினைத் தருகின்றன.
இதில் கூகுள் டாக்ஸ் ஒரு படி மேலாகச் சென்று கூகுள் டாக்ஸ் பக்கத்தில் மஞ்சள் நிற டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர், கூகுள் டாக்ஸ் தரும் அனைத்து வசதிகளையும் சப்போர்ட் செய்யாது என்று கூறுகிறது.
ஆபீஸ் 365 இயக்கத்தில் இன்ஸ்டன்ட் மெசேஜிங், ஓடியோ - வீடியோ கான்பரன்ஸ், இணைய வெளி ஒயிட் போர்டிங் வசதிகள் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு கிடைப்பதால் கூடுதல் வசதியுடன் இருப்பது தெரிகிறது.
ஆனால் செலுத்த வேண்டிய கட்டணத்தில் மைக்ரோசாப்ட் எங்கோ செல்கிறது. கூகுள் ஓர் அலுவலகத்தின் சில குறிப்பிட்ட வேலைகளுக்கு மட்டுமே பணம் கேட்கிறது. எடுத்துக்காட்டாக உங்கள் நிறுவன சர்வரில் கூகுளுக்குக் கட்டணம் செலுத்தி எத்தனை மின்னஞ்சல் அக்கவுண்ட் வேண்டுமென்றாலும் தனிப்பட்ட முறையில் வைத்துக் கொள்ளலாம்.
ஒவ்வொன்றுக்கும் 25 ஜி.பி இடம் தரப்படுகிறது. போன் தொடர்பு வசதியும் கிடைக்கிறது. மற்ற வசதிகளான கூகுள் டாக்ஸ் கொண்டுள்ள வேர்ட் ப்ராசசிங், ஸ்ப்ரெட்ஷீட், ஸ்லைட் ஷாஸ், பார்ம்ஸ், டேட்டா ஸ்டோரேஜ், ஜிமெயில், காலண்டர், ஸ்பேம் பில்டர் என நாம் பயன்படுத்தி வரும் அனைத்தும் இலவசமே. இந்த வகையில் கூகுள் மக்களுக்கு நெருக்கமாக இருக்கிறது.
இருப்பினும் ஆபீஸ் 365 மற்றும் கூகுள் டாக்ஸ் ஆகிய இரண்டையும் ஒப்பிட்டுப் பார்ப்பது முறையற்றது. இரண்டின் அடிப்படையும் அதன் வழியில் கிடைக்கும் வசதிகளும் வெவ்வேறு கட்டமைப்பு கொண்டவையே.
கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் ஆபிஸ் 365 இயக்கத்துடன் நல்லதொரு தொடக்கத்தினை மைக்ரோசாப்ட் ஏற்படுத்தியுள்ளது. தான் வழங்க இருக்கும் வசதிகளின் உயர் தன்மையே இதற்கு ஒரு நல்ல இடத்தைப் பிடித்துத் தரும் என்பது உண்மையே.

நோட்பாடை பயன்படுத்தி கோப்புகளை லாக் செய்வதற்கு

ஒரு கோப்பறையை மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இங்கு எந்த ஒரு மென்பொருளையும் பாவிக்காமல் வெறும் நோட்பாடினை மாத்திரம் வைத்து லாக் செய்ய முடியும்.
உதாரணமாக உங்களிடம் tamil என்ற கோப்பறை இருக்குதெனில் அந்த கோப்பறையை லாக் செய்வதற்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்.
1. முதலில் ஒரு நோட்பாடை திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்.
ren tamil tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
பின் அந்த நோட்பாடை lock.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.
2. பின் இன்னொரு நோட்பாடை திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்.
ren tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} tamil
பின் அந்த நோட்பாடை key.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.
3. இங்கு tamil என்பது நீங்கள் Lock செய்ய வேண்டிய கோப்பறையின் பெயர் ஆகும். இனி குறிப்பிட்ட அந்த tamil என்ற கோப்பறையை லாக் செய்வதற்கு lock.bat என்ற கோப்பை இரண்டு முறை கிளிக் செய்தல் வேண்டும்.
4. லாக் செய்த கோப்பறையை மீண்டும் Unlock செய்வதற்கு key.bat என்ற கோப்பை இரண்டு முறை கிளிக் செய்தல் வேண்டும்.
5. இதில் கவனிக்க வேண்டிய ஒரு விடயம் நீங்கள் கோப்பறையை லாக் செய்யும் போது லாக் செய்யும் கோப்பறையும், lock.bat என்ற கோப்பும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அதே போல Unlock செய்யும் போது unlock செய்யும் கோப்பறையும் key.bat என்ற கோப்பும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.

Sunday, July 10, 2011

கணனியின் IP முகவரியை மாற்றுவது எப்படி ?


இது எம் எல்லோருக்கும் நிகழக் கூடியது. நீங்கள் இன்டர்நெட்டில் ப்ரௌசிங் செய்து கொண்டிருக்கும்போது திடீரென “Page not found” என error message  ஒன்று வந்து நிற்கும். நீங்கள் உங்கள் மொடம் உட்பட எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்த்துவிட்டு வாடிக்கையாளர் சேவைக்கு அழைப்பை ஏற்படுத்தி என்ன நேர்ந்தது என கேட்க ஆரம்பிப்பீர்கள். இவ்வாறான நிகழ்வுகள் உங்கள் கணணியின் Internet Protocol (IP)  முகவரியினை புதுப்பிக்க வேண்டிய தேவை ஏற்படுவதால் நிகழும். கீழே தரப்பட்டுள்ள வழிமுறைகள் எவ்வாறு IP முகவரியினை புதுப்பிப்பது என விளக்குகிறது.

வழிமுறைகள்

  • strat button  இல் க்ளிக் செய்து Run  என்பதை தெரிவு செய்யுங்கள்.
  • Type “cmd” in the box and click on “OK.”  விண்டோவில் உடனடியாக கட்டளை ஒன்று தென்படும். இது பழைய DOS operating system  இனை ஒத்திருக்கும்.
  • Type “ipconfig /release” and press “Enter இது உங்கள் கணணியின் தற்போதைய IP முகவரியினை வெளியிடும்.
  • Type “ipconfig /renew” and press “Enter.” இது புதிய IP முகவரியினை ஒப்படைக்கும்.
  • Type “Exit” and press “Enter”  பின்னர் உங்கள் விண்டோ close  செய்யப்படும். தற்போது உங்கள் கணணி புதிய IP முகவரியினைப் பெற்றிருக்கும்.

ஆலோசனைகளும் எச்சரிக்கைகளும்

உங்கள் பிரச்சினைக்கான தீர்வை மேற்கொண்ட வழிமுறைகள் தரவில்லையென்றால் உங்களுடைய மொடம் மற்றும் router  இனை unplug  செய்து திரும்ப இணைத்துவிட்டு மீண்டும் அதே படிமுறைகளை செய்து பாருங்கள்.
உங்கள் கணணியில் ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகள் இருந்தால் (wireless மற்றும் LAN network Card) “ipconfig /all” கட்டளை அனைத்து IP  முகவரியினையும் காண்பிக்கும்.

விண்டோஸ் 8

விண்டோஸ் 8 இயங்குதளமானது (Operating System) 2012 இல் வெளியிடப்படு மென மைக்ரோசொப்ட் தெரிவிக்கின்றது. இது தொடர்பான செய்தியை மைக்ரோசொப்ட் தனது ' டச்சு' மொழி வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இறுதியாக மைக்ரோசொப்ட் தனது விண்டோஸ் 7 இயங்குதளத்தினை 2009 ஆம் ஆண்டு வெளியிட்டது.

விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே விண்டோஸ் 7 ஆகும்.

அண்மையில் அப்பிள் தனது மெக். ஒ.எஸ் எக்ஸ் 10.7 லயன் (Mac OS X 10.7 Lion) இயங்குதளத்தினை வெளியிட்டிருந்தது.

மேலும் இதில் அப்பிளின் அப் ஸ்டோர் (App Store) போன்ற வசதியையும் அப்பிள் உள்ளடக்கியிருந்தது.

மைக்ரோசொப்டும் இது போன்ற வசதியினை உள்ளடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விண்டோஸ் 7 ஐப் போல விண்டோஸ் 8 உம் பல புதிய மாற்றங்களை உள்ளடக்கியிருக்கலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தற்போது மைக்ரோசொப்ட், விண்டோஸ் போன் 7(Windows 7 mobile) மற்றும் எக்ஸ் பொக்ஸ் 360 இக்கான கைநெக்ட்(kinect) மோசன் சிஸ்டம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தன் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8 எப்படி இருக்கப்போகிறது என மைக்ரோசாப்ட் நிறுவனம், அண்மையில் நடைபெற்ற தொழில் நுட்பக் கருத்தரங்குகளில் தெரிவித்துள்ளது. தைபே நாட்டில் இது குறித்து உரையாற்றிய மைக்ரோசாப்ட் வல்லுநர் மைக்கேல் உறுதியான சில அம்சங்கள் குறித்து கூறியுள்ளார்.

தொழில் நுட்பத்தின் அடிப்படையில் பார்க்கையில், விண்டோஸ் 8, குறைந்த மின்சக்தியில் இயங்கும் ஏ.ஆர்.எம். சிப்களில் செயல்படக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. திரை தொட்டு இயக்கும் திறனும், எச்.டி.எம்.எல். 5 தொழில் நுட்பத்துடன் இணைந்து செயல்படும் திறனும் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

மக்களுக்குப் பயன்படும் விஷயங்களில், முதலாவதாக, விண்டோஸ் 8 சிஸ்டம் இயங்க, இப்போது விண்டோஸ் 7 பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களை மாற்ற வேண்டிய தேவை இருக்காது. ஏற்கனவே விஸ்டா சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதனை இயக்க புதிய ஹார்ட்வேர் சாதனங்களுடன் கூடிய பெர்சனல் கம்ப்யூட்டர் தேவை என்ற கட்டாயத்தினை மைக்ரோசாப்ட் முன்வைத்ததனால், விஸ்டா கம்ப்யூட்டர் பயனாளர்களிடம் சென்றடையாமல் போனது. அந்த தவற்றை மீண்டும் செய்திடாமல் இந்த முறை மைக்ரோசாப்ட் விழித்துக் கொள்கிறது. எனவே கோடிக்கணக்கான கம்ப்யூட்டர்கள், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு எளிதாக மாறிக் கொள்ளலாம். ஹார்ட்வேர் தேவைக்கென செலவு இருக்காது. புதிய கம்ப்யூட்டர் வாங்கினால் தான், விண்டோஸ் 8 பயன்படுத்த முடியும் என்ற நிலையை உருவாக்கி, புதிய சிஸ்டம் மக்களிடம் செல்லாத ஓர் சூழ்நிலையை ஏற்படுத்தக் கூடாது என மைக்ரோசாப்ட் மிகக் கவனமாக இம்முறை செயல்படுகிறது.
அடுத்ததாக, விண்டோஸ் 8 பயன்படுத்த இருக்கும் யூசர் இன்டர்பேஸ் எனப்படும் பயன்படுத்துபவருக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு இடையே உள்ள செயல்பாட்டை எளிதாக்கும் வழி முறை ஆகும். இதனை Immersive UI என மைக்ரோசாப்ட் அழைக்கிறது. "கவனத்தை முழுவதும் கவர்ந்த இடைமுகம்' என்பது இதன் பொருள். புதிய மற்றும் பழைய ஹார்ட்வேர் கொண்ட கம்ப்யூட்டர் அனைத்திலும் தன்னை மாற்றிக் கொண்டு இயங்கும்படி இது அமைக்கப்படுகிறது. இந்த இடைமுகம் சரிப்பட்டு வராது என எண்ணுபவர்கள், வழக்கம்போல, தற்போதைய ஏரோ வகை இடைமுகத் தினைப் பயன்படுத்தலாம்.

விண்டோஸ் 8 சிஸ்டம் தொடுதிரையில் தொட்டு இயக்கும்படியாக அமைக்கப் படுகிறது. எனவே இதன் முழுப் பயனும் தொடுதிரை உள்ள மானிட்டர்களைக் கொண்டு பெர்சனல் கம்ப்யூட்டர்களை இயக்குபவர்களுக்குக் கிடைக்கும். தொடுதிரை செயல்பாடு மட்டுமின்றி, பல வகையான சென்சார் செயலாக்கமும் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தரப்பட்டுள்ளது. இதனால் மோஷன் செயலாக்கம், திரைக்கு அருகில் செல்லும் தூரம் ஆகியன மூலமும் சில பயன்பாடுகள் கிடைக்கும். தொடுதிரை மானிட்டர்கள் இல்லாதவர்களுக்கு வழக்கம்போல பயன் பாட்டினை மேற்கொண்டு அனுபவிக்கலாம்.

புதிய இடைமுகத்தில் பெரிய அளவில் வண்ணங்களில் ஐகான்கள் அமைக்கப் படுகின்றன. விண்டோஸ் போன் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தரப்படும் தொழில் நுட்பமும் தோற்றமும் இந்த வகையில் தரப்படுகின்றன. இருப்பினும் தற்போதைய பழக்கப்படி மவுஸ் மற்றும் கீ போர்டு மூலமும் சிஸ்டத்தினை இயக்கலாம். பேஜ் அப் மற்றும் பேஜ் டவுண் கீகள் மூலம் அப்ளிகேஷன் டைல்ஸ் இடையே செல்லலாம். ஒரு மவுஸ் கிளிக் மூலம் இவற்றை இயக்கலாம். கீ போர்டில் இப்போது போல, ஷார்ட் கட் கீகள் மூலமும் இயக்கலாம்.

இருப்பினும் சில விஷயங்களை இப்படித் தான் இருக்க வேண்டும் என மைக்ரோசாப்ட் கூறி வருகிறது. மானிட்டர் திரை விண்டோஸ் 8 சிஸ்டத்தின் முழுமையான பயன்களைப் பெற வேண்டும் என்றால், திரை 16:9 என்ற வகையில் ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டு அமைக்கப்பட வேண்டும். 1366x768 என்ற ரெசல்யூசனுக்குக் குறையாமல் திரை இருக்க வேண்டும். 1024x768 என்ற ரெசல்யூசனில் உள்ள திரைகளிலும் இந்த சிஸ்டத்தின் பயன்பாடுகள் கிடைக்கும் என்றாலும், 1366x768 என்ற வகைதான் சிறப்பான பயன்பாட்டினைத் தரும் என்று மைக்ரோசாப்ட் கூறுகிறது.
விண்டோஸ் 8 எப்போது வெளியாகும் எனச் சரியான தேதி அறிவிக்கப் படவில்லை. ஆனால் எப்படியும் 2012ல் வெளியாகும் என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

எனவே விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரும்போது, அதனைத்தான் பயன்படுத்த வேண்டும் என விரும்பும் வாடிக்கையாளர்கள், இப்போதே மேலே கூறப்பட்ட மானிட்டர்களையும், தற்போதுள்ள ஹார்ட்வேருக்குச் சற்று கூடுதலான திறன் கொண்ட கம்ப்யூட்டர் களையும் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.


தமிழ் மாதம்-பெயர் காரணம்

ஆங்கில மாதம் என்றால் அது ஜனவரி பிப்ரவரி என துவங்குகின்றன. தமிழ் மாதம் என்பது சித்திரை, வைகாசி எனத் துவங்குகின்றன. இதற்கான பெயர் காரணத்தை இனி காண்போம்.பெரும்பாலும் ஒரு மாதத்தில் பௌர்ணமி அன்று எந்த நக்ஷத்திரமோ அதுவே அந்த மாசத்தின் பெயராக இருக்கும் அனேகமாக அன்றைக்கு ஒரு பண்டிகையாகவும் விழாவாகவும் இருக்கும்.

1. சித்திரை மாதம்
சித்திரை மாசத்தில் சித்ரா நக்ஷத்திரத் தன்றுதான் பௌர்ணமி வரும். அதனால் சித்திரை மாசம் என்றானது

2. வைகாசி மாதம்
விசாக சம்துமந்தமான வைசாகம்.விசாக நக்ஷத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி ஏற்படுகிற மாசம் தான் வைசாகி. மதுரை என்பது மருதை என திரிவது போல் சமஸ்கிருத வைசாகி தமிழில் வைகாசி ஆயிற்று.

3. ஆனி மாதம்
அனுஷ நக்ஷத்திர சம்மந்தமானது ஆனுஷீ.அந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுகிற மாசம் ஆனுஷீமாசம். தமிழில் ஷ என்ற எழுத்து உதிர்ந்து ஆனி என்றாயிற்று.

4. ஆடி மாதம்
ஆஷாட நக்ஷத்திரத்தில் பூர்வ ஆஷாடம்,உத்தர ஆஷாடம் என்று இரண்டு. பூர்வம் என்றால் முன்,உத்தரம் என்றால் பின்.பூர்வ/உத்தர ஆஷாடம் என்பதில் உள்ள அந்த ர்வ என்ற கூட்டெழுத்து சிதைந்தும்.ஷ உதிர்ந்தும் தமிழில் பூராடம் உத்திராடம் என்கிறோம். இந்த இரு நக்ஷத்திரங்களில் ஒன்றில் பௌர்ணமி வரும் மாதம் ஆஷாடி.இதில் ஷா உதிர்ந்து ஆடி ஆயிற்று.

5.ஆவணி மாதம்
ச்ராவணம் என்பது ச்ரவண நக்ஷத்திரத்தை குறிக்கும். முதலில் உள்ள ச்ர அப்படியே தமிழில் drop ஆகி வணத்தை ஓணம் என்கிறோம்.அது மஹாவிஷ்னுவின் நக்ஷத்திரமாதலால் திரு என்ற மரியாதை சொல்லை சேர்த்து திருவோணம் என்கிறோம். அனேகமாக பௌர்ணமி ச்ராவண நக்ஷத்திரத்தில் வருவதால் ச்ராவணி எனப்படும்.இதில் சமஸ்கிருதத்திற்கே உரிய ச்,ர என்ற கூட்டெழுத்து drop ஆகி ஆவணி மாதமாயிற்று.

6. புரட்டாசி மாதம்
ப்ரோஷ்டபதம் என்பதற்கும் ஆஷாடம் என்பதற்கும் ஆஷாடம் போலவே பூர்வமும் உத்தரமும் உண்டு.பூர்வ ப்ரோஷ்டபதம் தான் தமிழில் பூரட்டாதி ஆயிற்று.அஷ்ட என்பது அட்ட என திரிந்தது.உத்திர ப்ரோஷ்டபதம் என்பது உத்திரட்டாதி ஆயிற்று.இந்த நக்ஷத்தில் பௌர்ணமி ஏற்படுவதால் ப்ரோஷ்டபதி என்பது திரிந்து புரட்டாசி ஆயிற்று.

7. ஐப்பசி மாதம்
ஆச்வயுஜம்,அச்வினி என்பதை அச்வதி என்கிறோம்.அதிலே பௌர்ணமி வருகிற ஆச்வயுஜீ அல்லது ஆச்வினீ தான் திரிந்து ஐப்பசி ஆயிற்று.

8. கார்த்திகை மாதம்
க்ருத்திகை நக்ஷத்திரம் தான் கார்திகை.இந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுவதால் அது கார்த்திகை மாதமாயிற்று.

9. மார்கழி மாதம்
மிருகசீர்ஷம் என்பது மார்கசீர்ஷி என்றாயிற்று.இதில் பெரும்பாலும் பௌர்ணமி வரும் மாதம் மார்கசீர்ஷி என்றாயிற்று.அதில் சீர்ஷி என்பது மறுவி மார்கழி என்றாயிற்று.

10. தை மாதம்
புஷ்யம் தான் தமிழில் பூசம் .புஷ்ய சம்மந்தமானது பௌஷ்யம். புஷ்யத்திற்கு திஷ்யம் என்றும் பெயர்.பௌர்ணமி திஷ்யத்திலே வரும் மாதம் தைஷ்யம்.அதிலே கடைசி மூன்று எழுத்துக்களும் போய் தை என்றாயிற்று.

11. மாசி மாதம்
மக நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருவதால் மாகி என்றாயிற்று. இதில் கி என்பது சி யாக மருவி மாசி ஆயிற்று.

12. பங்குனி மாதம்
பூர்வ பல்குனியை பூரம் என்றும் உத்தர பல்குனியை உத்திரம் என்கிறோம்.இந்த இரு நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருவதால் பல்குனி எனப்படும். அதில் ல எழுத்து மருவி பங்குனி ஆயிற்று.

Wednesday, March 16, 2011

கணினி - ஆணா... பெண்ணா..?

ஆசிரியைக்கு உண்மையிலேயே விடை தெரியவில்லை.. எனவே மாணவர்கள் தனியாகவும், மாணவிகள் தனியாகவும் கூடிப்பேசி இதற்கு முடிவு காணுமாறு அறிவுறுத்தினார்..........

மாணவிகள் கணினி ஆண்பால்தான் என்ற முடிவுக்கு வந்தார்கள்... அதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் இதோ... 
  
1) அதுக்கு எதையும் சுலபமா புரிய வைக்க முடியாது..

2) உருவாக்கினவனைத் தவிர வேறே யாருக்கும் அதோட நடைமுறையை புரிஞ்சிக்க முடியாது..

3) நாம ஏதாவது தப்பு பண்ணா மனசுலேயே வச்சிருந்து நேரம் பார்த்து மானத்தை வாங்கும்..

4) எந்த நேரத்துல புகையும்.... எந்த நேரத்துல மயங்கும்ன்னு சொல்லவே முடியாது..

5) நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி தோணும்...!

மாணவர்களோ கணிணி பெண்பால்தான்னு சாதிச்சாங்க.. அதுக்கு ஆதாரமா அவங்க சொன்னது இதோ...

1) எப்பவுமே அடுத்த கணிணியோட ஒத்துப் போகவே போகாது..

2) எட்ட இருந்து பார்க்க கவர்ச்சிகரமா இருக்கும்.. ஆனா கிட்டபோனாதான் அதோட வண்டவாளம் தெரியும்..

3) நிறைய ஸ்டோர் பண்ணி வச்சிருக்கும்... ஆனா எப்படி பயன்படுத்தணும்ன்னு அதுக்கு தெரியாது..

4) பிரச்சினையை குறைக்கறத்துக்காக கண்டுபிடிக்கப்பட்டவை... ஆனா பெரும்பாலான சமயங்கள்ல அதுகளேதான் பிரச்சினையே..

5) அதை சொந்தமாக்கிக்கிட்ட பிறகுதான் நமக்கு புரியும்.. அடடா இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான மாடல் கிடைச்சிருக்குமேன்னு...!